போலீசார் போல நடித்து லாரி டிரைவரிடம் பணம் பறித்த கும்பல் கைது.!

0 4285

கோவை அருகே போலீஸார் போல நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்து சென்றவர்களை மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர், ஒடிசா நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்த போது, மதுக்கரை அருகே உணவகம் ஒன்றின் முன்பு லாரியை நிறுத்தி அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது போலீசார் என கூறி வந்த கும்பல், அவரிடம் ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்து அவை சரியாக இல்லை என கூறி மிரட்டி, ஆயிரத்து 100 ரூபாயை பறித்துச்சென்றது.

சந்தேகமடைந்து நாகராஜன் மதுக்கரை போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது அலி, பாஷா உள்ளிட்ட 4 பேர் என்பதும், போலி அதிகாரிகள் என்பதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments