பருத்தி நூல் விலை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டம்..!

0 3488
பருத்தி நூல் விலை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டம்..!

பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிக்கடை நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளும் மூடப்பட்டன.

இதேபோல், கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments