சுப்பிரமணியசுவாமி கோவிலில் 137அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபர்.. தீயணைப்புத்துறையினர் - போலீசார் இணைந்து பத்திரமாக மீட்டனர்..!

0 3764
சுப்பிரமணியசுவாமி கோவிலில் 137அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபர்.. தீயணைப்புத்துறையினர் - போலீசார் இணைந்து பத்திரமாக மீட்டனர்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இக்கோவிலின் ராஜகோபுரத்தில் 9 கலசங்கள் உள்ள உச்சிப் பகுதியில் நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் ஏறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையிருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் ராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக மேல்பகுதிக்கு சென்று அங்கிருந்த மர்ம நபரிடம் நைசாக பேசி பத்திரமாக மீட்டு கீழே இறங்கினர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments