திரிபுரா அமைச்சரவையில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு.. ஆளுநர் எஸ்.என். ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்..!

0 3037
திரிபுரா அமைச்சரவையில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு.. ஆளுநர் எஸ்.என். ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்..!

திரிபுரா மாநிலத்தில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்கின்றனர். முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில் மாணிக் சாஹா புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

அகர்தலாவில் நேற்று நடந்த விழாவில் ஆளுநர் எஸ்.என். ஆர்யா, முதலமைச்சர் மாணிக் சாஹாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று 9 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

பிப்லப் குமார் தேப் அமைச்சரவையில் பழங்குடியின மக்கள் நலத்துறை கவனித்த மேவர் குமார் ஜமாதியாவை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments