அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் பலி.!

0 2345

அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சச்சார், நாகோன், திமா ஹசாவ் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 222 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தொடரும் கனமழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், ரயில் தண்டவாளங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவம், தீயணைப்பு துறையுடன் இந்திய விமானப்படையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments