சின்னசேலத்தில் பேக்கரி ஒன்றில் பப்சை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.!

0 3158

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பப்சை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில், பெற்றோர்கள் அந்த கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அரோமா கேக்ஸ் என்ற பேக்கரியில், பெண்கள் சிலர் பப்ஸை வாங்கியுள்ளனர்.

வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளுக்கு அந்த பப்சை கொடுத்த நிலையில், அவர்கள் அதனை சாப்பிட்ட பின் வாந்தி எடுத்ததாகவும், அந்த பப்ஸ் கெட்டுப்போன நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த பப்சை விற்ற கடைக்கு சென்ற பெற்றோர், அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments