விருதுநகரில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயற்சித்த கும்பல் கைது

0 14182

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 67 லட்ச ரூபாய் போலி பண நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த சுஜித் குமார் உள்பட 4 பேர் கும்பல், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, கூமாப்பட்டியை சேர்ந்த பூமிராஜ் உள்பட 5 பேரிடம் சினிமாவில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை கவனித்த ரோந்து போலீசார், சுஜித் குமாரின் காரில் இருந்து 67 லட்ச ரூபாய் போலி பணநோட்டுளை பறிமுதல் செய்து, சுஜித், அவனது கூட்டாளிகள் 3 பேர் மற்றும் பூமிராஜை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments