சென்னையில் தன்னை பார்த்து எச்சில் துப்பியதாக போக்குவரத்து ஊழியரை சரமாரியாகத் தாக்கிய காவலர்.!

0 13160

சென்னை சைதாப்பேட்டையில் தன்னை பார்த்து எச்சில் துப்பியதாகக் கூறி போக்குவரத்து ஊழியரை சரமாரியாகத் தாக்கிய காவலரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

போக்குவரத்து பணியாளரான பாலச்சந்திரன், லெமன் சோடா குடிக்கும் போது இருமல் ஏற்பட்டதால் சாலையில் எச்சில் துப்பியதாகவும், அப்போது அவ்வழியாக சென்ற காவலர் ஜான் லூயிஸ், எச்சில் துப்பி தன்னை ஏளனம் செய்வதாக கூறி பாலச்சந்திரனை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தான் ஒரு இதய நோயாளி என கூறியபடி வலி தாங்க முடியாமல் கதறிய பாலச்சந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட காவலர் ஜான் லூயிஸை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments