பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பலி..

0 3449
பாகிஸ்தானில், ராணுவ வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில், ராணுவ வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா என்னும் பகுதியில் உள்ள சந்தை வழியாக பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, உடலில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனத்தை நோக்கி நடந்து வந்த மர்ம நபர், திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்.

இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 3 குழந்தைகளும் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அப்பாவி குழந்தைகளை கொலை செய்த காட்டுமிராண்டிகளை பிடிக்கும் வரை ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments