கோவையில் கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரன் கைது.!

0 4367

கோவையில் கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரன் கைது செய்யப்பட்டான்.

தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அந்த இளைஞனின் தாய் இறந்து, தந்தை காணாமல் போய்விட்ட நிலையில், பாட்டி மீனாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளான்.

3 மாதங்களுக்கு முன் சிறு விபத்து ஒன்றில் சிக்கிய கார்த்திக், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். இந்த நிலையில், அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக பாட்டி மீனாவிடம் கேட்கவே, அவர் வீட்டு உரிமையாளரிடம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால் சொன்ன தேதியில் கார்த்திக் பணத்தை திருப்பிக் கொடுக்காததால், கார்த்திக்குடன் சண்டையிட்டுள்ளார் மீனா.

அப்போது ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மீனாவின் கழுத்தை அறுத்துவிட்டு கார்த்திக் தப்பியோடியுள்ளான். படுகாயமடைந்த மீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தியைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments