மின்வேலி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாயி கைது.. 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

0 3572
மின்வேலி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாயி கைது.. 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே அனுமதி இன்றி தனது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடி நல்லாம்பட்டி கிராமத்திற்குள் புகுந்த யானை, அங்குள்ள சீனிவாசன் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்திற்குள் நுழைந்தபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.

விசாரணையில் சீனிவாசன் சட்டவிரோதமாக வயலில் மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்ததையடுத்து மாரண்டஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்த வனச்சரகர் உட்பட 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments