டாஸ்மாக் கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி.. கட்டிட மேஸ்திரி கைது..!

0 2677
டாஸ்மாக் கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி.. கட்டிட மேஸ்திரி கைது..!

சேலத்தில் நள்ளிரவில் இரண்டு டாஸ்மாக் கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை மர்ம நபர் ஒருவர் துளையிடும் சப்தம் கேட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தமிழரசு  என்பவர்  பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் மோகன் என்பதும் கட்டிட மேஸ்திரியான அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments