ரஷ்யாவின் படையெடுப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாராலும் கணிக்க முடியாது - உக்ரைன் அதிபர்

0 4088

ரஷ்யாவின் படையெடுப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாராலும் கணிக்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 12 வாரங்களை எட்டியுள்ள நிலையில், போர் நடவடிக்கை முடிவில்லாமல் இன்னும் நீடிப்பது உக்ரைன் மக்களுக்கு மட்டுமின்றி உக்ரைனின் நட்பு நாடுகளுக்கும், உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளுக்கும் துர்திருஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த பகுதிகளில் மின்சாரம், குடிநீர், சமூக வலைதள சேவைகளை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments