வாட்ஸப் குழுவில் இறை நிந்தனையில் ஈடுபட்ட பள்ளி மாணவி.. கற்களால் அடித்து கொன்று உடலை தீ வைத்து எரித்த சக மாணவர்கள்..!

0 5716
வாட்ஸப் குழுவில் இறை நிந்தனையில் ஈடுபட்ட பள்ளி மாணவி.. கற்களால் அடித்து கொன்று உடலை தீ வைத்து எரித்த சக மாணவர்கள்..!

நைஜீரியாவில் இறை நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, பள்ளி மாணவியை சக மாணவர்கள் அடித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.

மாணவர் ஒருவர் வாட்ஸப் குழுவில் இறை போதனைகளை பதிவிட்டதை கண்டித்து டெபோரா சாமுவேல் என்ற மாணவி கருத்து பதிவிட்டுள்ளார். அந்த மாணவியை சக மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கியதால், பள்ளி நிர்வாகிகள் போலீசார் உதவியுடன் அந்த மாணவியை மீட்டு ஒரு அறையில் மறைத்து வைத்தனர்.

கற்களை வீசி போலீசாரை விரட்டிய மாணவர்கள் அந்த மாணவியை கற்களால் அடித்து கொன்று விட்டு அந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments