சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ.!

0 3734

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், காரில் சென்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

பழைய  பல்லாவரத்தை சேர்ந்த காவலர் ரமணன் என்பவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் செங்கல்பட்டு நோக்கி, டாடா இண்டிகா காரில் சென்றுகொண்டிருந்தார்.

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்ததைக் கண்டு 5 பேரும் உடனடியாகக் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து  எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments