மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

0 17796
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்தை சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பெஸ்கோ என்ற இந்த புதிய மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. ஊசி மூலம் ஒரேமுறை இந்த மருந்து செலுத்தப்படும் நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் வரை உலகம் முழுவதும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த மருந்து மூலம் பயனடைந்துள்ளதாக ரோஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments