மேடவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 3157

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தாம்பரம் - வேளச்சேரி தடத்தில் மவுண்ட் - மேடவாக்கம் சாலைச் சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலைச் சந்திப்புகளை இணைத்து 2 கிலோமீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் மேடவாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் குறையும்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments