இலங்கையில் கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை...ஓரிரு நாட்களில் மீனவர்கள் வீடு திரும்ப வாய்ப்பு!

0 2291

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த மார்ச் 24ம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையிலுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments