தேர்தல் முன்விரோதம் காரணமாக முதியவர் கட்டையால் அடித்துக் கொலை.. ஊராட்சி மன்றத் தலைவி உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை..!

0 3433

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக 75 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியசாமி என்ற அந்த முதியவரின் மருமகள் எடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

ஊராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிமேகலைக்கும், பெரியசாமிக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், மாலை வேளையில் வீட்டில் இருந்த பெரியசாமியை மணிமேகலை, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் கட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியசாமியை காப்பாற்ற முயன்ற அவரது மகனும், மருமகளும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments