ரயில்வே தண்டவாளத்தை கடந்த யானை...உரிய நேரத்தில் வேகத்தை குறைத்த ஓட்டுநர்...இணையவாசிகள் பாராட்டு!

0 3170

மேற்கு வங்க மாநிலத்தில் வனப்பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை யானை ஒன்று கடப்பதை கவனித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரசின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகிய இருவரும், உரிய நேரத்தில் எமர்ஜென்சி பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலின் வேகத்தை குறைத்ததால் விபத்தில் இருந்து அந்த யானை தப்பியது.

குல்மா மற்றும் சிவோக் ஆகிய இடங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், நெட்டிசன்கள் பலர் யானையின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments