காஷ்மீரில் தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நிகழ்த்திய பயங்கரவாதிகள்.!

0 2562

காஷ்மீரில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிதர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

புத்கம் மாநிலத்தில், தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்கு கிளெர்க்காக பணியாற்றிய ராகுல் பத் என்பவரை சுட்டு விட்டு தப்பி ஓடினர்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிதர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments