மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதி கைது.!

0 2986

மதுரையில் ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த ஸ்ரீபுகழ் இந்திரா என்பவர் முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நெருக்கமாக உள்ளதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அரசுத்துறையில் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக பல தவணைகளாக 47 லட்ச ரூபாய் வரை பெற்றதாகவும் பஞ்சவர்ணம் என்பவர் புகார் அளித்தார்.

வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்ததுடன், பணத்தை திருப்பிக்கேட்டபோது ஸ்ரீ புகழ் இந்திராவும், அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments