மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி...இந்திய விமானப்படை அறிவிப்பு!

0 4840

வானில் இருந்து அதிக தூரம் சென்று தாக்கும், மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

சுகாய் 30 எம் கே ஐ போர் விமானத்தில் இருந்து வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்த இலக்கு மீது துல்லியமாக ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானத்தில் பொருத்தப்படும் இந்த பிரம்மோஸ் ஏவுகணை மூலம் நிலம், கடல் பகுதியில் உள்ள இலக்குகள் மீது நீண்ட தொலைவில் இருந்து துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments