பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு.. செயினை பறித்த போது பெண் சாலையில் தவறி விழுந்த சிசிடிவிக் காட்சிகள்..!

0 22294
பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு.. செயினை பறித்த போது பெண் சாலையில் தவறி விழுந்த சிசிடிவிக் காட்சிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம், மர்மநபர் 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும் சிசிடிவிக்காட்சி வெளியாகியுள்ளது.

பழனி மலை அடிவாரம் இடும்பன் கோயில் சாலையில் வசித்து வரும் தங்க பொண்ணு என்பவர் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை நோட்டமிட்டு சென்ற மர்மநபர், மளிகைக்கடைக்கு வருவது போல் சென்று தங்கபொண்ணு அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துவிட்டு கூட்டாளியுடன் தப்பிச்சென்றுள்ளான். இதில் நிலைதடுமாறி அப்பெண் சாலையில் விழுந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments