காதலன் போதைக்கு அடிமையானதால் காதலை கைவிட்ட மருத்துவ மாணவி.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் வீட்டைத் தாக்கிய காதலன்..!

0 5316
காதலன் போதைக்கு அடிமையானதால் காதலை கைவிட்ட மருத்துவ மாணவி.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் வீட்டைத் தாக்கிய காதலன்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மருத்துவ மாணவியின் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து போதை இளைஞன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிகரை கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, பள்ளிக்காலத்தில் லோகேஷ் என்பவனை காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பள்ளிக்கல்வி முடிந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவிக்கு, லோகேஷ் தப்பான நண்பர்களுடனான சேர்க்கையால் குடிக்கு அடிமையானது தெரியவந்தது.

இதனையடுத்து அவனை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார். போர் காரணமாக ஊர் திரும்பிய மாணவிக்கு லோகேஷ் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இரவில் மாணவியின் பெற்றோருக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்தும் ஆபாசமாகப் பேசியுள்ளான். இதுகுறித்து போலீசில் புகாரளித்ததால், தனது நண்பர்களுடன் மது போதையில் வந்து மாணவியின் வீட்டைத் தாக்கியுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments