கோவை : ரசாயனம் மூலம் பழுக்க பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் அழிப்பு

0 2984

கோவையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம் மற்றும் 2 டன் சாத்துக்குடியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments