இலங்கையில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா டிவிட்டரில் பதிவு

0 4223

லங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான திணைக்களம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளால் கவலையடைகிறோம் எனவும்,

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதில் இலங்கை மக்கள் கவனம் செலுத்த  கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments