வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2ஆயிரம் லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் கைது

0 10998

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் கைது  செய்யப்பட்டார்.

சாயமலையைச் சேர்ந்த அழகுராஜ் என்பவர் தாயார் ராஜம்மாள் காலமானதை தொடர்ந்து வாரிசுச் சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மைதீன் பட்டாணி 2ஆயிரம் ரூபாய்  லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவரது அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாயை அழகுராஜ் வட்டாட்சியரிடம் அளித்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments