தஞ்சையில் ஆடிட்டர் ஒருவர் வெட்டி படுகொலை

0 5509

தஞ்சையில் ஆடிட்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று இரவு தோட்டத்து வீட்டில் இருந்த ஆடிட்டர் மகேஷ்வரனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றது.  இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்த மகேஷ்வரன் அதே பகுதியில் மாநகராட்சி கழிவறையை ஏலத்தில் எடுத்ததில் கார்த்தி என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்ததால் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments