குழந்தைக்கு தனியாக ‘பெர்த்’: ரயில்களில் புதிய படுக்கை வசதி அறிமுகம்

0 4069

கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கை வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலின் முன்பதிவு பெட்டியில், தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் குழந்தைக்கு தனியாக புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டு உள்ளது.

சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக அனைத்து ரயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments