மதுபானங்களை ஏற்றிச் சென்ற சரக்குவேன் கவிழ்ந்து விபத்து ; சிதறிக் கிடந்த பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்

0 4496
மதுபானங்களை ஏற்றிச் சென்ற சரக்குவேன் கவிழ்ந்து விபத்து

மதுரையில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற சரக்குவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விரகனூர் சுற்றுச்சாலை அருகே அந்த வாகனம் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மதுபானங்கள் பெட்டியுடன் சாலையில் சிதறிக்கிடந்த நிலையில், அவ்வழியே சென்ற மக்கள் மதுப்பாட்டில்களை போட்டிப்போட்டு எடுத்துச்சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments