தீவிர புயலான 'அசானி', நாளை காலை ஆந்திராவின் காக்கிநாடா,விசாகப்பட்டினம் கடற்கரையை அடைய வாய்ப்பு

0 2974

தீவிர புயலான 'அசானி', நாளை காலை ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாகவும், அம்மாநிலத்திற்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆந்திர மாநில கடற்கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை கப்பல்கள், கடற்படை விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ஒடிசாவிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூரியில் 179 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments