தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குவாதம்.!

0 14279

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊராட்சிக் குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவிக்கும், பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் உருவானது.

மாவட்ட ஊராட்சித் தலைவியான தமிழ்ச்செல்வியின் கணவர் மது போதையில் உறுப்பினர்கள் குறித்து அவதூறாகப் பேசிய ஆடியோ வாட்சப்பில் பரவியதாகக் கூறப்படுகிறது.

6 வது வார்டு உறுப்பினர் கனிமொழி என்பவர் இதுகுறித்து கூட்டத்தில் கேள்வி எழுப்பவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. தொடர்ந்து இருவரது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments