50 வயது பெண்ணை மணந்த 32 வயது பட்டதாரி இளைஞர்...சரமாரியாகத் தாக்கிய பெண்ணின் உறவினர்கள்!

0 121366

கொடைக்கானலில் 50 வயது பெண்ணை திருமணம் செய்த 32 வயது இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

தன்ராஜ் என்ற அந்த இளைஞர், கூக்கால் பகுதியில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார்.

விடுதியில் பணியாற்றிய 50 வயது பெண்ணுக்கும், தன்ராஜுவுக்கும் காதல் ஏற்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் உறவினர்கள், தன்ராஜின் காலை கட்டி, தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments