இலங்கையில் ஜனநாயகம், நிலைத்தன்மைக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்தியா அறிவிப்பு

0 3772

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நிலைத்தன்மைக்கும், பொருளாதார மீட்சிக்கும் முழு ஆதரவு அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான அரிந்தம் பக்சி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த ஆண்டு மட்டும் 3 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை இந்திய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனுடன் கூடுதலாக, உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இந்தியா வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments