தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

0 3035

விதிமுறைகளை மீறும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 20 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றன.பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சூழலில், ஏனைய மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய மசோதாக்கள் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments