மருத்துவமனை முன்பு போராடுபவர்கள் ஜிப்மர் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

0 2612

புதுச்சேரிக்கு இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாயாக 600 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும், அது மக்களின் வளர்ச்சிக்கு பயன்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சேவை வரி துறை சார்பில், அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை இதனை தெரிவித்தார்.

மேலும் ஜிப்மரில் இந்தித்திணிப்பு எதுவும் இல்லை என கூறிய அவர், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை தகவல்களும், அறிக்கைகளும் தமிழில் தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments