ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரூ.4.45 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8பேர் கைது

0 2385

ஆந்திர மாநிலம் கடப்பாவில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

மைதுக்கூர் பகுதியில் கள்ள நோட்டு புழங்குவதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 8பேரை தனிப்படையினர் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்து  4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள், 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments