தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 4661

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், 10-ந் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அசானி புயல் எதிரொலியால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments