சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது கண்டெய்னர் பெட்டகம் விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு..!

0 4515
சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது கண்டெய்னர் பெட்டகம் விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு..!

சென்னை எண்ணூர்-மணலி விரைவு சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது கன்டெய்னர் பெட்டகம் விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை அண்ணா நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தங்கை நிவேதா உடன் மணலி புதுநகர் பகுதி அருகே உள்ள கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளார்.

மணலி விரைவுச் சாலை அருகே அதிவேகமாக எதிரே வந்த லாரி மற்றொரு லாரி மீது மோதியதில் தூக்கிவீசப்பட்ட கண்டெய்னரின் பெட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது விழுந்ததுள்ளது.

இருவரும் கன்டெய்னர் பெட்டகத்தின் அடியில் சிக்கி கொண்ட நிலையில், உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments