இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு திரும்பும் போது சரக்கு வேன் மோதி விபத்து.. இளைஞர் உயிரிழப்பு.. 2 பேர் படுகாயம்..!

0 5621
இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு திரும்பும் போது சரக்கு வேன் மோதி விபத்து.. இளைஞர் உயிரிழப்பு.. 2 பேர் படுகாயம்..!

இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற 3 பேர் மீது பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மறவனூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இந்த விபத்து நிகழ்ந்தது. போலீசார் விசாரணையில், திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த குமார், துளசி, சக்திவேல் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது.

விபத்தில், சக்திவேல் என்பவர் உயிரிழந்தை அடுத்து, படுகாயமடைந்த மற்ற 2 பேருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments