திருப்பூரில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்ததில் 2 லாரிகளுமே தீப்பற்றி எரிந்து ஒருவர் பலி.!

0 3327

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு லாரிகளுமே தீப்பற்றி எரிந்து ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் இருந்து 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அதேநேரம் தாராபுரத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தேங்காய் தொட்டிகள் ஏற்றும் லாரி காங்கயம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

குண்டடம் பிரிவு அருகே இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் ஒரு லாரியில் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து 2 லாரிகளுமே பற்றி எரிந்தன.

இரண்டு லாரி ஓட்டுநர்களும் ஒரு உதவியாளரும் தீயில் சிக்கிய நிலையில், ஒருவர் உயிரிழந்தார். லாரியில் கொண்டு செல்லப்பட்ட இருசக்கர வாகனங்களும் முற்றிலுமாக எரிந்து கருகின. 50 விழுக்காடு தீக்காயங்களுடன் மற்ற இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments