உக்ரைனில் பள்ளி வளாகம் மீது ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்.. 60 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு - ஆளுநர் தகவல்

0 2100

உக்ரைனின் லுஹான்ஸ்க் நகரம் அருகே சுமார் 90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகம் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கார்கீவ் நகரை மீட்கும் முயற்சியில், அங்கு முகாமிட்டுள்ள ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவத்தினர் பீரங்கி தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கார்கீவ் நகர் அருகே உள்ள 5 கிராமங்களை இதுவரை உக்ரைன் படைகள் மீட்டுள்ளன. உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கில், அவர்கள் வரும் திசையில் உள்ள மூன்று மேம்பாலங்களை ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments