கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஆனந்த் மகிந்திரா... அன்னையர் தினத்தன்று பரிசு

0 22764

கோவை வடிவேலம்பாளையத்தில் குறைந்த விலையில் இட்லி விற்றுத் தொண்டாற்றி வரும் மூதாட்டி கமலாத்தாளுக்காக வீடு கட்டிய மகிந்திரா நிறுவனம் அதை அன்னையர் நாளான இன்று பரிசளித்துள்ளது.

முப்பதாண்டுகளுக்கு மேல் இட்லி விற்றுவரும் கமலாத்தாள் பாட்டி பற்றி அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா மூன்றரை சென்ட் நிலத்தில் புதிய வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பணி முடிக்கப்பட்ட அந்த வீட்டை மகிந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள் மூதாட்டி கமலாத்தாளுக்குப் பரிசளித்தனர். இது குறித்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments