கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

0 2126

கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாராந்திர சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, வாராந்திர சேவைகளான அஷ்டதள பாதபத்ம ஆராதனை, நிஜபாத தரிசனம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments