கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து : பதைபதைக்கும் காட்சிகள்..!

0 2603

ர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சங்கேஸ்வரம் பெல்காம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பைக் மீது மோதியது.

அதில், பைக்கில் இருந்தவர் தூக்கி வீசப்பட்ட நிலையில்
சாலையை கடக்க மற்றொரு பக்கத்தில் காத்திருந்த 2 பைக்குகள் மீதும் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments