ஒற்றை யானை தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி.. வேலைக்குச் சென்றவர் வீடு திரும்புகையில் யானையிடம் சிக்கி பலி..!

0 1803
ஒற்றை யானை தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி.. வேலைக்குச் சென்றவர் வீடு திரும்புகையில் யானையிடம் சிக்கி பலி..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார்.

பவானி எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் கொண்ட உறவினர்கள் எஸ்டேட் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒற்றை யானை தாக்கி முருகன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments