தூத்துக்குடியில் "சிங்கம் 2" படப்பிடிப்பு நடந்த கட்டிடத்துக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞர்.!

0 2832

தூத்துக்குடியில் சிங்கம் 2 திரைப்படத்தில் காவல் நிலையமாக செட்டிங் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட கட்டிடத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள இந்த பழங்கால கட்டிடம் காவல் நிலையம் போல் செட்டிங் செய்யப்பட்டு, நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றது.

அதன் பின்னர் முறையாகப் பராமரிக்கப்படாமல் விடப்பட்ட இந்தக் கட்டிடம் பாழடைந்து, சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கட்டிடத்துக்குள் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

சடலத்தை மீட்ட போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments