புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.!

0 2426

புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் லாஸ்பேட்டை இந்தியன் வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு சென்றதும் பெட்டியை திறந்து பார்த்த போது பணம் இல்லாததையடுத்து, லாஸ்பேட்டை போலீஸில் அவர் புகார் அளித்தார். வழியில் இளநீர் கடையில் வண்டியை நிறுத்திச்சென்று இளநீர் அருந்தியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், வங்கியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில், இருவர் சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments