ஜாம்செட்பூரில் டாட்டா உருக்காலையில் பெரும் தீவிபத்து..

0 1508
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரில் டாட்டா உருக்காலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரில் டாட்டா உருக்காலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர்.

ஜாம்செட்பூர் டாட்டா உருக்காலையில் கோக் அலகில் மின்கலம் வெடிப்பால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. உருக்காலைக்கான எரிபொருளான கோக்கில் தீப்பற்றிப் பெருமளவில் பரவியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தொழிலாளர் இருவர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments